அதிமுகவுடன் கூட்டணியா? வாசன் விளக்கம்
சென்னை:
அதிமுக தனி மரமாக நிற்கிறது. எனவே அக்கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கூட்டணி குறித்து திறந்த மனதோடு இருப்பதாக ஜெயலலிதாகூறியிருப்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அதிமுக தனி மரமாகி விட்டது. எனவே எந்த சந்தேகமும் தேவையில்லை.ஐனநாயக முற்போக்குக் கூட்டணி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. வருகிற சட்டசபைத் தேர்தலிலும் இந்தக்கூட்டணி தொடரும்.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரியாதைக்குரிய மத்திய அமைச்சர். காங்கிரஸ் கட்சி செயலிழந்து விட்டது அவர் கூறியிருப்பதுஅவரது சொந்தக் கருத்து. என்னைப் பொருத்தவரை அனைவரும் ஒரே அணியாக செயல்பட்டு காங்கிரஸை முதல் இயக்கமாககொண்டு வர வேண்டும் என்பதே எனது எண்ணம்.
சத்தியமூர்த்தி பவனில் வன்முறைக்கு இடமில்லை. வன்முறைச் செயலில் ஈடுபட்ட 4 பேர் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர். காமராஜர்இருந்த இடம் இது. இங்கு வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறார்கள். காலம் கனியும்போது அந்த நிலை உருவாகும்.
வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம். அது தான் கட்சியின்கோட்பாடும் கூட. எனவே அந்த கோட்பாட்டைத் தாண்டி யாராவது செயல்பட்டால் கட்சித் தலைமை சும்மா இருக்காது, அதைஅனுமதிக்காது. கட்சிக்குள் குந்தகம் விளைவிக்க முயலும் எதிர்க்கட்சி நண்பர்கள் தோல்வி அடைவார்கள்.
காவிரிப் பிரச்சினையில் அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் கண் துடைப்புப் போராட்டமாகும் என்றார் வாசன்.
பின்னர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. விநாயகமூர்த்தியை வாசன் சந்தித்துஉடல் நலம் விசாரித்தார். அப்போது தமிழருவி மணியன் பாரமலை ஆகியோர் உடனிருந்தனர். சர்ச்சையில் சிக்கியுள்ளவிநாயகமூர்த்தியை, வாசன் சந்தித்துப் பேசியது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.