காவிரி: மத்தியக் குழு இன்று அறிக்கை தாக்கல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிெரதமரின் உத்தரவின் பேரில் காவிரி நதி நீர் இருப்பு குறித்து தமிழக மற்றும் கர்நாடக அணைகளை பார்வையிட்ட மத்தியநிபுணர் குழுவினர் இன்று பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.
காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடவேண்டுமென்று பிரதமரை சந்தித்து முதல்வர்ஜெயலலிதா மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த அனைத்துக் கட்சி குழுவினர் கேட்டுக் கொண்டனர்.இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் மத்திய அரசின் சார்பில் நிபுணர்குழு அமைக்கப்பட்டது. இந்த மத்தியகுழுவினர் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்து கடந்த வாரம் பார்வையிட்டுசென்றனர்.
இக்குழுவினர் தங்களது அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் நேற்று சமர்ப்பிப்பதாக இருந்தது. ஆனால்,நிபுணர் குழுவினரின் அறிக்கை காவிரி கண்காணிப்புகுழு மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரிடம் இன்றுசமர்பிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications