தேர்தலை சந்திக்க திமுகவினர் தயாராக வேண்டும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. எனவே மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுங்கள்என்று திமுகவினரின் கலந்துரையாடல் கூட்டத்தில் கருணாநிதி கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட வாரியாக திமுகவினரின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது.தூத்துக்குடி, சிவகங்கை, மற்றும் விருதுநகர் மாவட்ட கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், இன்னும் சில மாதங்களில் தேர்தல்வரப்போகிறது.

தேர்தல் நேரத்தில் நம்முடைய தோழர்கள் இன்னும் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். தேர்தல் விரைவில் வர இருப்பதால்தான் தேர்தலுக்கான ஆயத்தங்களை ஆளும் கட்சி செய்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா சலுகைகளை வாரி வழங்கிவருகிறார்.

ஆளும் கட்சியின் நிலை சரியாக இல்லை என்று உளவுத் துறையினர் கூறியிருக்கின்றனர். அதனால் தான் மக்களை ஏமாற்றநாள்தோறும் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன.

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசு தண்ணீரை பெற்றுத் தரவில்லை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இவர்கர்நாடகத்திற்கு சென்று முதலமைச்சரோடு பேசியிருக்க வேண்டும். தண்ணீரை கேட்டு பெற்றிருக்க வேண்டும்.

அதையெல்லாம் செய்யாமல் மத்திய அரசு மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசில் திமுகஇணைந்திருப்பதால் அந்த கெட்டப் பெயர் நமக்கு வரட்டும் என்பதற்காக அந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா சலுகைகளை அறிவிக்கலாம். ஏற்கனவே பறித்த சலுகைகளை மீண்டும் கொடுக்கலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஊருக்கு ஊர் இருக்கும் பிரச்சினைகளை நாம் வெளிக்கொண்டு வரவேண்டும்.

ஜெயலலிதா வாரி வழங்கும் சலுகைகள் தேர்தலுக்கான தந்திரம் என்பதை திண்ணைப் பேச்சுக்களிலும், தெருக்கூட்டங்களிலும்சொன்னால் போதும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+