சென்னையில் கோடீஸ்வரப் பெண்மணி படுகொலை
சென்னை:
சென்னை அருகே திருவொற்றியூரில் கோடீஸ்வரப் பெண்மணி படுகொலை செய்யப்பட்டார்.
திருவொற்றியூர் அஞ்சுகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. 50 வயதாகும் ராணியின் கணவர் பெயர் சக்தி. இவர்களுக்குஏராளமான சொத்துக்கள் உள்ளன. பல கோடி ரூபாய் அளவுக்கு பல வீடுகளும் உள்ளன.சக்தி சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். ராணி-சக்தி தம்பதியின் மகன் பாலாஜி. அவருக்கு திருமணமாகி 2குழந்தைகளும் உள்ளனர். ராணிக்கும், அவரது மருமகளுக்கும் ஒத்துப் போகாத காரணத்தால் பாலாஜி தனது மனைவி,குழந்தைகளுடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.
இந் நிலையில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் பாலாஜி தனது தாய் வீட்டிற்கே வந்து குடும்பம்நடத்தி வந்தார். கடந்த சனிக்கிழமை பாலாஜி வெளியே சென்று விட்டார். அவரது மனைவி, குழந்தைகளுடன் அவரது தாய்வீட்டுக்குச் சென்றிருந்தார். ராணி மட்டும் வீட்டில் இருந்தார்.
இந் நிலையில் வெளியில் சென்றிருந்த பாலாஜி வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது, வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது.தாயார் தூங்குவதாக நினைத்த பாலாஜி காலையில் வரலாம் என்று நினைத்து திரும்பிச் சென்று விட்டார்.
காலையில் அவர் வீட்டுக்குத் திரும்பிய போதும் வீடு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்தார். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது தாயார் ராணி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார். உடனடியாக போலீஸாருக்குத் தகவல்கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். ராணி சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. சொத்துப் பிரச்சினை தொடர்பாக ராணி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனபோலீஸார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications