தமிழைக் காக்க பழ. நெடுமாறன் அழைப்பு
நாகர்கோவில்:
![]() |
அடுத்த தலைமுறை தமிழர்கள், தமிழ் மொழி மீதான அன்பையும், நேசத்தையும் வளர்த்துக் கொள்ளாவிட்டால், தமிழ்மொழியும், கலாச்சாரமும் அழிந்து போவதைத் தவிர்க்க முடியாது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்கூறியுள்ளார்.
உலகத் தமிழர் பேரவையின் 3வது மாநாடு நாகர்கோவிலில் நடந்தது. இதில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு பேசுகையில்,
20ம் நூற்றாண்டில் வாழ்ந்த எண்ணற்ற தமிழறிஞர்கள் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் காக்கும் வகையில்பல்வேறு பங்களிப்பை அளித்து தமிழ் மொழிக்குஉதவியுள்ளனர்.
இதன் காரணமாக அவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் இன்னும் தமிழ் மொழி மீது பற்றுடனும், ஈர்ப்புடனும் இருக்கும் நிலைஏற்பட்டது. அதேபோல, அடுத்த தலைமுறைத் தமிழர்கள், தமிழர்களாகவும்,
தமிழ் மொழியை நேசிப்பவர்களாகவும், தமிழ் கலாச்சாரத்தைக் காப்பவர்களாகவும் இருக்க வேண்டுமானால், நமது காலத்தில்தமிழையும், தமிழ்க் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் வேண்டும்.
அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் மொழியின் தொன்மை, தமிழ்க் கலாச்சாரத்தின் சிறப்புகளை சொல்லிக் கொடுக்கவேண்டும். தமிழைக் காப்பவர்களாக அவர்களை மாற்ற பயிற்றுவிக்க வேண்டும் என்றார் நெடுமாறன்.
விடுதலைச் சிறுத்தை தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், தமிழின் பாதுகாவலன் என்று சொல்லிக் கொள்ளும் சிலஅரசியல் தலைவர்கள், உண்மையில் தமிழை மதிக்காதவர்களாகவே இருக்கிறார்கள்.இதன் காரணமாகவே தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் இழுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களை தமிழர்கள் அடையாளம்கண்டு கொண்டு புறக்கணிக்க வேண்டும்.
ஆங்கிலத்தை எதிர்ப்பதற்காக தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை நாங்கள் தொடங்கவில்லை. மாறாக தமிழின் பெருமையைதமிழர்களிடம் எடுத்துக் கூறவும், தமிழ் மொழியை அவர்கள் மறந்து விடாமல் இருக்கும் வகையில் தான் இந்த இயக்கம்ஆரம்பிக்கப்பட்டது. தமிழர்களே தமிழைப் புறக்கணித்தால் வேறு யாராலும் தமிழைக் காக்க முடியாது.
மற்ற மொழிகளையும் கற்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. அப்படிக் கற்றால் தான் தமிழின் பெருமை அவர்களுக்குப்புரியும். அதேசமயம் தமிழை காவு கொடுத்து விட்டு மற்றமொழிகளுக்கு வெண் சாமரம் வீசுவதை ஏற்க முடியாது.
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 17ம் தேதி மாபெரும் போராட்டத்தைநாங்கள் நடத்தவுள்ளோம். அதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறைசெல்லவும் தயாராக உள்ளோம்என்றார் திருமாவளவன்.













Click it and Unblock the Notifications