தீவிரவாத முகாம்களை பாக். மூடாது: கூறுகிறார் அமெரிக்க நிபுணர்
சென்னை:
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களை மூட அந்நாட்டுத் தலைவர்கள் யாரும் விரும்பவில்லை, மூடவும்மாட்டார்கள் என்று அமெரிக்க அமைதிக் கழகத்தின் தெற்காசியாவுக்கான திட்ட அதிகாரி கிறிஸ்டைன் ஃபேர் கூறியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் தீவிரவாதம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய ஃபேர்,பாகிஸ்தானில் ஏராளமான தீவிரவாத பயிற்சி முகாம்கள் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.இவற்றை மூட அந்நாட்டுத் தலைவர்கள் யாரும் விரும்பவில்லை. முகாம்களை மூடுமாறு அந்நாட்டுத் தலைவர்கள் யாரும்உத்தரவிட மாட்டார்கள்.
இந்த முகாம்களை மூலதனமாக வைத்துத் தான் காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவைப் பணிய வைக்க முடியும் என்றுஅந்நாட்டுத் தலைவர்கள் நம்புகிறார்கள். இதற்குக் காரணம், இந்தியா அனைத்து வகையிலும் பாகிஸ்தானை விட பல மடங்குமுன்னேறிய நிலையிலும், வலுவாகவும் இருப்பதால், தீவிரவாதத்தை வைத்தே தனது காரியத்தை சாதிக்க பாகிஸ்தான்நினைக்கிறது.
இந்தியாவில் மட்டும் தீவிரவாதத்தை பெரிய அளவில் நிகழ்த்துவது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் எண்ணம் அல்ல. ஈராக்கில்உள்ள அமெரிக்க அமைப்புகளையும் தாக்க அவர்கள் திட்டமிடுகிறார்கள்.
முன்பெல்லாம் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த நாடுகள், ஏழை நாடுகளில் தான் தீவிரவாதிகள் அதிகம் உருவாகினர்.ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. இப்போதைய தீவிரவாதிகள் நன்கு படித்தவர்கள், வசதியான குடும்பப்பின்னணியைக் கொண்டவர்களாக அவர்கள் உள்ளனர்.
தொழில்நுட்ப அறிவும் அவர்களிடம் அமோகமாக உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு, சாதாரணஅமெரிக்கர்களை விட அதிக அளவு தொழில்நுட்ப அறிவு இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க அரசு உணர்ந்துள்ளதுஎன்றார் ஃபேர்.