For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக்டருக்கு செக்ஸ் தொல்லை: தளவாய் சுந்தரம் நேரில் ஆஜராக உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசு பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர்தளவாய் சுந்தரம் மற்றும் பெண் மருத்துவர் கோமதி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று விசாரணைக் குழு சம்மன்அனுப்பியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர் டாக்டர் கோமதி. தன்னிடம் அமைச்சர் தளவாய் சுந்தரம்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில், டாக்டர் கோமதி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவசுப்ரமணியம், இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்றஉயர்நீதிமன்ற நீதிபதி மருதமுத்து தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்தது.

இந்தக் குழு, வருகிற 11ம் தேதி முதல் தனது விசாரணையைத் தொடங்கவுள்ளது. இதையடுத்து விசாரணைக்கு நேரில்ஆஜராகுமாறு அமைச்சர் தளவாய் சுந்தரம், டாக்டர் கோமதி ஆகியோருக்கு நீதிபதி குழு சம்மன் அனுப்பியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X