For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோட்டை முன் அதிமுகவினர் தீக்குளிக்க முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை கோட்டை முன் 2 அதிமுக நிர்வாகிகள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ பெண்ணாத்தூரை சேர்ந்தவர்கள் ஏழுமலை, சேவல் ஏழுமலை. இவர்கள் இருவரும் தங்களதுபகுதியின் வட்ட நிர்வாகிகளாக இருந்து வந்தனர்.

இந் நிலையில் இருவரது பதவியும் சமீபத்தில் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும்ஜெயலலிதாவை சந்தித்து தங்களுக்கு மீண்டும் பதவியை வழங்கக் கோரிக்கை விடுப்பதற்காக நேற்று சென்னைக்கு வந்தனர்.

ஆனால் இவர்களால் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. இதனால் விரக்தியடைந்த இருவரும் தற்கொலை செய்யமுடிவெடுத்தனர்.

நேற்று கோட்டைக்கு வந்த இருவரும் தங்களது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப் பார்த்தபோலீஸார் பாய்ந்து வந்து இருவரையும் தடுத்தனர்.

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் இருவரும் தற்கொலை செய்ய முயற்சித்தற்கான காரணத்தை கூறினர். பின்னர்இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X