தனுஷ்கோடி ஆதித்தன் ஜெயித்தது செல்லும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தனுஷ்கோடி ஆதித்தன்வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தனுஷ்கோடி ஆதித்தன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவரைஎதிர்த்து அதிமுக சார்பில் அமிர்த கணேசன் உள்ளிட்ட 13 பேர் போட்டியிட்டனர். இதில் தனுஷ்கோடி ஆதித்தன் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட ராஜகோபாலன், வாக்காளர் ஆறுமுகம் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தங்களது மனுவில், வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும்போதே சொத்து விவரங்கள் குறித்த அபிடவிட்டை தனுஷ்கோடிஆதித்தன் தாக்கல் செய்யவில்லை. 3 நாட்கள் கழித்தே அபிடவிட் தாக்கல் செய்தார். எனவே அவரது வெற்றி செல்லாது என்றுஅறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிஉத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பில், வேட்பு மனு தாக்கல் செய்யும்போதே சொத்து விவரங்கள் குறித்த அபிடவிட்டைதனுஷ்கோடி ஆதித்தன் தாக்கல் செய்திருக்காவிட்டாலும், வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய கடைசி நாளன்று அவர் தாக்கல்செய்துள்ளார்.

எனவே வேட்பு மனு ழுமை அடைந்து விட்டது. இந்தப் பிரச்சினை தொடர்பாக மனுதாரர்கள் தேர்தல் அதிகாரியையும்அணுகியுள்ளனர். அவரும் உரிய காரணத்தைக் கூறி அவர்களது கோரிக்கையை நிராகரித்து விட்டார். எனவே தனுஷ்கோடிஆதித்தன் வெற்றி முறையற்றது என்ற வாதம் ஏற்புக்குரியதல்ல என்று கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+