தினகரன் திவாலானவர்: அமலாக்கப் பிரிவு மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டி.டி.வி. தினகரனை திவால் ஆனவராக அறிவிக்க அனுமதி கோரி மத்திய அமலாக்கப் பிரிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளது.

அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பாக கடந்த 2002ம் ஆண்டு தினகரனுக்கு டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கப்பிரிவு ரூ. 28 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த அபராதத் தொகையை தினகரன் கட்டவில்லை.

இதையடுத்து தங்களை ஏன் திவால் ஆனவராக அறிவிக்கக் கூடாது என்று கேட்டு அமலாக்கப் பிரிவு தினகரனுக்கு நோட்டீஸ்அனுப்பியது. இதையடுத்து அமலாக்கப் பிரிவின் நோட்டீஸுக்குத் தடை விதிக்கக் கோரி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தைஅணுகினார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அமலாக்கப் பிரிவு நோட்டீஸுக்குத் தடை விதித்தார். இந் நிலையில் இந்தத்தடை உத்தரவை எதிர்த்து அமலாக்கப் பிரிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

அதில், தினகரனை திவால் ஆனவராக அறிவிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவைவிசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கண்ணதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறிதினகரனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+