கனடா: ரன்வேயில் மோதி வெடித்த ஏர்-பிரான்ஸ் விமானம்- 43 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
டொரான்டோ:
![]() |
கனடாவின் டொரான்டோ விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் பிரான்ஸ் விமானம் ரன் வேயில் இருந்து விலகி ஓடி, தரையில்மோதி வெடித்துச் சிதறியது. ஆனால், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் பலியாகவில்லை. 43 பயணிகள் சிறியகாயங்களுடன் தப்பிவிட்டனர்.
297 பயணிகளுடன் பாரிசில் இருந்து வந்த ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ்-340 விமானம் டொரான்டோவின் பியர்சன்சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது அங்கு கடும் மழை பெய்து கொண்டிருந்தது.
![]() |
தரையிறங்கிய விமானத்தை மின்னல் தாக்கியது. இதையடுத்து விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. மின்னல் தாக்கிய அடுத்தவினாடியே விமானம் ரன்வேயில் மிக பலமாக மோதியது.
இதையடுத்து தாவியபடி ரன்வேயில் இருந்து விலகி படு வேகத்தில் தரையில் ஓடியது. அப்போது விமானம் வெடித்துச் சிதறியது.சிதறிய விமானத்தில் தீப் பிடித்துக் கொண்டது.
ஆனால், விமானத்தின் உடைந்த பகுதிகள் வழியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறிவிட்டனர். இந்த விபத்தில் 43பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.














Click it and Unblock the Notifications