லண்டனில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் அதிகரிப்பு
லண்டன்:
லண்டனில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து இங்கிலாந்தில் முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள்அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
லண்டனில் கடந்த மாதம் 7ம் தேதி பாதாள ரயில் மற்றும் பஸ்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 55 பேர்பலியானார்கள். இந்த சம்பவம் லண்டன் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் லண்டனில் கடந்த மாதம் 21ம் தேதி மீண்டும் குண்டு வெடித்தது. இதில் யாரும்காயமடையவில்லை. ஆனாலும் அடுத்தடுத்து நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் லண்டன் நகர மக்கள் பீதியில்உறைந்து போனார்கள்.
அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் தான் இன்னும் லண்டன்வாசிகள் உள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகுலண்டனில் பாதாள ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு அல் கொய்தா இயக்கம் பொறுப்பேற்றது. மேலும் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள்பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
இந் நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் தாக்குதல்கள்அதிகரித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இங்கிலாந்தில் மத ரீதியாக 269மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த வருடம் 40 சம்பவங்கள் தான் நடந்துள்ளன. கடந்த 1 மாதத்திற்குள் நடந்த மத மோதல் சம்பவங்களில் முஸ்லிம்கள் மீதுநடத்தப்பட்ட தாக்குதல்கள் தான் அதிகம்.
இது தொடர்பாக இங்கிலாந்திலுள்ள முஸ்லிம் பிரமுகர்களுடன் லண்டன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போதுமுஸ்லிம்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸார் உறுதியளித்தனர்.












Click it and Unblock the Notifications