சிறுமிகளிடம் செக்ஸ்: 10ம் தேதி குற்றப்பத்திரிகை நகல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிறுமிகளிடம் பாலியல் தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு வருகிற10ம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படுகிறது.
சென்னை சூளைமேட்டில் வசித்து வந்த சுங்க அதிகாரி ராதாகிருஷ்ணன் சிறுமிகளை தத்தெடுத்து வளர்ப்பதாக கூறி அவர்களிடம்பாலியல் மோசடியில் ஈடுபட்டார். இதையொட்டி ராதாகிருஷ்ணன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த கிட்டு, பெருமாள் உட்பட4 பேரை போலீஸார் கைது செய்தனர்.இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு உயர்நீதிமன்றவளாகத்திலுள்ள மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந் நிலையில் வழக்கு விசாரணை நேற்று மகளிர் நீதிமன்றத்தில் நடந்து. அப்போது விசாரணையை வருகிற 10ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம் 4 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications