பெண் டாக்டர் உதவியுடன் கார் கடத்தல்: பிரபல ரவுடி கைது
மதுரை:
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியை போலீஸார் கைது செய்துள்ளனர். இவரும், பெண் டாக்டர் ஒருவரும் கேரளாவிலிருந்து20க்கும் மேற்பட்ட கார்களைத் திருடி விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடி. இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள்உள்ளன. நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த செல்வத்தை போலீஸார் தற்போது வளைத்துப் பிடித்துள்ளனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலத்திலிருந்து டாக்சிகளைவாடகைக்குப் பிடித்துக் கொண்டு மதுரைக்கு வருவாராம் செல்வம். பின்னர் டிரைவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டுகாருடன் தப்பி விடுவார்.
இதுபோல 20க்கும் மேற்பட்ட கார்களை கேரளாவிலிருந்து கடத்தி வந்து விற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதில், செல்வத்திற்குதேவி மீனாட்சி என்ற பெண் டாக்டர் உதவியாக இருந்துள்ளதாக செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெண் டாக்டரைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். செல்வம் பிடிபட்டுள்ள தகவல் அறிந்ததும்கேரளாவிலிருந்து போலீஸ் படை மதுரை வந்துள்ளது. செல்வத்தை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க கேரள போலீஸார்முடிவு செய்துள்ளனர்.