மூளை இறந்த பெண்ணுக்கு பிரசவம்: அமெரிக்க டாக்டர்கள் சாதனை
ரிச்மண்ட்:
மூளை செயல்படாமல் போய்விட்ட நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் ரிச்மண்ட் நகரைச் சேர்ந்த சூசன் டோரஸ் என்ற 26 வயது பெண்ணுக்கு கடந்த மே மாதம் மூளையில் ரத்தஅடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது மூளை செயல்படாமல் போனது. ஆனால், அப்போது அவர் கர்ப்பிணியாகஇருந்தார்.இதையடுத்து அவரது மூளை செயற்கையான நரம்புக் கட்டுப்பாட்டு முறையில் செயல்பட வைக்கப்பட்டது. கர்ப்பிணியானஅவரது சிசு வளரும் வரை அவரை உயிருடன் வைக்க கடும் முயற்சி எடுக்கப்பட்டது.
ரிச்மண்டில் உள்ள நேசனல் இன்ஸ்டியூட் ஆப் ஹெல்த் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் சூசன் லைப்-சப்போர்ட் சிஸ்டத்தின்உதவியுடன் உயிருடன் வைக்கப்பட்டிருந்தார். இதற்கு அதிகமான செலவானதால் நிதி உதவி கோரி அவரது கணவர் ஒருஇணையத் தளத்தைத் துவக்கினார்.
அந்த இணையத் தளம் மூலம் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி உலகெங்கும் இருந்தும் குவிந்தது.
இந் நிலையில் சூசன் நேற்று பெண் குழந்தையை பிரசவித்தார். சிசேரியன் முறையில் அந்தக் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது.குழந்தை மிகவும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
25 வாரங்களே ஆன நிலையில் அந்தக் குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது அந்தக் குழந்தை ஆர்லிங்டனில்உள்ள விர்ஜினியா மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications