For Daily Alerts
Just In
சென்னை விமானங்களில் தமிழில் அறிவிப்பு
சென்னை:
சென்னையிலிருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரும் விமானங்களில் இனிமேல் தமிழில் அறிவிப்பு செய்யப்படும் என்றுமத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்வே துறை இணை அமைச்சர் ஆர். வேலு,தலைமையில் பாமக எம்.பி.க்கள் பேராசிரியர் ராமதாஸ், இ. பொன்னுச்சாமி, ஏ.கே. மூர்த்தி, கே. தன்ராசு, டாக்டர் செந்தில்ஆகியோர் கொண்ட குழு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலை சந்தித்தனர்.அப்போது சென்னையிலிருந்து புறப்பட்டு செல்லும் மற்றும் சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களிலும் ஆங்கிலம் மற்றும்இந்தியுடன் தமிழிலும் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களிலும், அதே போல சென்னைக்கு வரும் விமானங்களிலும்ஆங்கிலம் மற்றும் இந்தியுடன் தமிழிலும் அறிவிப்பு செய்ய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. க்களிடம் மத்தியஅமைச்சர் பிரபுல் படேல் உறுதியளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
Story first published: Thursday, August 4, 2005, 5:30 [IST]