சென்னை- மும்பை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது
சென்னை:
ஒரு வாரத்திற்குப் பிறகு தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் இருந்து மும்பைக்கு ரயில் போக்குவரத்து மீண்டும்தொடங்கியுள்ளது.
மும்பையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் பஸ், ரயில் மற்றும் விமானப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல நாட்கள் மும்பை விமான நிலையம் மூடப்பட்டது.கடும் வெள்ளம் காரணமாக மும்பை நகரமே துண்டிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களிருந்தும் மும்பைக்கு ரயில் போக்குவரத்துநிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து மும்பைக்கு செல்லும் ரயில்களும்நிறுத்தப்பட்டிருந்தன. இந் நிலையில் மும்பையில் மழை குறைந்ததால் ரயில் போக்குவரத்து சீராகத் தொடங்கியுள்ளது.
சென்னை- தாதர் எக்ஸ்பிரஸ், கோவை- மும்பை லோகமான்யா திலக் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி- மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ்ஆகிய ரயில்கள் வழக்கம் போல ஓடத்தொடங்கியுள்ளன.
இதே போல புவனேஸ்வரர்- மும்பை கொனார்க் எக்ஸ்பிரஸ், ஐதராபாத்- மும்பை ஹுசேன் சாகர் எக்ஸ்பிரஸ் மற்றும் ஐதராபாத்-மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் வழக்கம் போல ஓடுகின்றன.












Click it and Unblock the Notifications