தூர்தர்ஷன் தமிழ் செய்தி நேரம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னைத் தொலைக்காட்சியின் பொதிகை அலைவரிசையில், ஒளிபரப்பாகும் தமிழ் செய்தியின் கால அளவு, பாட்டாளி மக்கள்கட்சியின் கோரிக்கையை ஏற்று 30 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.பிக்கள் பேராசிரியர் ராமதாஸ், பொன்னுச்சாமி, ஏ.கே.மூர்த்தி, தன்ராஜ் ஆகியோர் டெல்லிசென்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டியை சந்தித்துப் பேசினர்.அப்போது, பொதிகை அலைவரிசையில் முன்பு 30 நிமிடங்களுக்கு தமிழ் செய்தி ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் அது தற்போது15 நிமிடங்களாக குறைக்கப்பட்டு விட்டது. மீண்டும் செய்திகளின் கால அளவை 30 நிமிடங்களாக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.
அதை ஏற்றுக் கொண்ட ஜெயபால் ரெட்டி, ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மீண்டும் பொதிகை அலைவரிசையில் 30 நிமிடங்களுக்குசெய்திகள் ஒளிபரப்பாகும் என்று அறிவித்தார். பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications