நாடு ஒளிர்கிறது: இந்தியாவில் 44 % வீடுகளில் மின்சார பல்பு கிடையாது!
டெல்லி:
இந்தியாவில் 44 சதவீத வீடுகளில் மின்சார இணைப்பே கிடையாது என மக்களவையில் மத்திய அரசு இன்று தெரிவித்தது.
மின்துறை அமைச்சர் பி.எம்.சயீத் கூறுகையில்,நாட்டில் 54 சதவீத வீடுகளுக்குத் தான் மின் இணைப்பு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்புத் தர திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 9வது ஐந்தாண்டுத் திட்டத்தைவிட 10வதுதிட்டத்திற்கு ரூ. 1,43,399 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 214 சதவீதம் அதிகமாகும்.
2012ம் ஆண்டில் கேட்கும் அனைவருக்கும் மின் இணைப்புத் தரும் வகையில் மின் உற்பத்தியும் மின் கட்டமைப்பும்அதிகரிக்கப்படும். இதற்கு தனியார்துறையில் இருந்தும் நிதி திரட்டப்படும்.
இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள 14 முக்கிய நீர் மின்சார நிலையத் திட்டப் பணிகளில் 11 திட்டங்கள் பெரும் தாமதமாகிவருகின்றன என்றார்.
நாட்டில் பாதி வீடுகளில் கூட மின்சார பல்பு இல்லாத இந்த நிலையில் தான் நாடு ஒளிர்கிறது என்று கோஷம் போட்ட முந்தையபாஜக அரசு.