ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்: கலாம்
ஹைதராபாத்:
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு ஒரு நாள் நிச்சயம் நிரந்தர இடம் கிடைத்தே தீரும் எனஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
ஹைதராபாத் வந்த கலாம் அங்குள்ள ஜூப்ளி ஹில்ஸ் உயர் நிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவ, மாணவிகளுடன் அவர்20 நிமிடங்கள் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.அவர் கூறுகையில், நமது நாடு 100 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்டது. இதனால் நமக்கு ஐ.நா. சபையின் பாதுகாப்புகவுன்சிலில் நிரந்தர இடம் கிடைத்தே ஆக வேண்டும். அது நமது உரிமை. ஒரு நாள் அந்த இடம் நமக்கு நிச்சயம் கிடைக்கும்என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
முன்பு விஞ்ஞானியாக இருந்ததற்கும் இப்போது ஜனாதிபதியாக இருப்பதற்கும் என்ன பெரிய வித்தியாசத்தை உணர்கிறீர்கள்என்று ஒரு மாணவன் கேட்டதற்கு பதிலளித்த கலாம்,
எந்த பெரிய வித்தியாசமும் இல்லை. எனது விஞ்ஞானப் பணிகளை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு ஆராய்ச்சித் திட்டத்திலும் ஈடுபட்டிருந்தேன்.இப்போதும் தொடர்ந்து அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.
ஜனாதிபதி ஆகிவிட்டதால் ஆராய்ச்சிகள் தொடர்பாக நான் எதையும் இழந்துவிடவில்லை. இன்னும் எனது மாணவர்களுக்குநான் ஆராய்ச்சிகளில் உதவிக் கொண்டு தான் இருக்கிறேன்.
மேலும் மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவது தொடர்பான ஒரு ஆராய்ச்சியில் நானும் சக மாணவர்களும்தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். மூளை பாதிப்பால் நினைவுகளை இழந்த குழந்தைகளுக்கு அந்த நினைவுகளைத் திரும்பக்கிடைக்கச் செய்வது தொடர்பான ஒரு ஆராய்ச்சி அது. அதில் நான் இப்போதும் பங்கேற்றுள்ளேன்.
விவசாயம், கல்வி, மருத்துவ நலம், தகவல் தொழில்நுட்பம், அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சி, நதிகளை இணைப்பதுஆகியவற்றில் நாம் மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிச்சயம் அதைச் செலுத்துவோம் என்றார் கலாம்.












Click it and Unblock the Notifications