மத்திய அரசு திட்டங்களை கிடப்பில் போடும் ஜெ அரசு: கருணாநிதி
சென்னை:
மத்திய அரசின் பல நல்ல திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்துவதில் அதிமுக அரசுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்றுதிமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத் வெள்ளிக்கிழமை காலை சென்னை வந்தார். நேராக கோபாலபுரத்தில் உள்ள திமுகதலைவர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற அவர், சிறிது நேரம் அவருடன் பேசினார். அப்போது மத்திய வர்த்தக இணைஅமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் உடனிருந்தார்.சந்திப்புக்குப் பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், மரியாதை நிமித்தமாகத் தான் கமல்நாத் சந்தித்தார்.சட்டசபைத் தேர்தல் தொடர்பாக நாங்கள் எதுவும் பேசவில்லை. தொகுதி உடன்பாடு குறித்துப் பேசவும் இது உரிய காலம்அல்ல. அதற்கு நிறைய நேரம் உள்ளது.
மத்திய அரசின் பல்வேறு தொழில் திட்டங்களை கமல்நாத் தெரிவித்தார். அவற்றை தமிழகத்தில் அமல்படுத்தவும் தயாராகஇருப்பதாக கூறினார்.
ஆனால், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள அதிமுக அரசுக்குத் தான் இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் சற்றும்அக்கறை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது தானே என்றார் கருணாநிதி.
முன்னணியில் தமிழகம்:
பின்னர் நிகழ்ச்சியொன்றில் பேசிய மத்திய அமைச்சர் கமல்நாத், சர்வதேச முதலீடுகளை கவர்ந்திழுப்பதில் தமிழகம் தான்முதலிடத்தில் உள்ளது. சமீப காலத்தில் தயாரிப்புத் துறையில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் அனைத்துமேதமிழகத்தைத் தான் வந்தடைந்துள்ளன என்று பாராட்டினார்.