For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேட்டிகளை பதுக்கியதாக வழக்கு: தாமரைக்கனிக்கு பிடிவாரண்ட்

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுதிகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் இலவச வேட்டி, சேலைகளை வழங்கியபோது, 1000 வேட்டி,சேலைகளைப் பதுக்கி விட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சித்தலைவருமான தாமரைக்கனிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு பொங்கல் தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்குவிநியோகிப்பதற்காக 12,567 வேட்டிகளும், 17,332 சேலைகளும் வழங்கப்பட்டன.

இவற்றில் 500 வேட்டிகளையும், 500 சேலைகளையும் நகராட்சித் தலைவரான தாமரைக்கனி பதுக்கி விட்டதாக கூறி அவர் மீதுநகராட்சி ஆணையர் மனோகர சந்திரன் போலீஸில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாமரைக்கனி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பானவிசாரணையில் தாமரைக்கனி ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தநீதிபதி சீனிவாசன் பிடிவாரண்ட் பிறப்பித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X