தேனி மருத்துவக் கல்லூரி: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தரக் கோரி தமிழக அரசு சார்பில்தொடரப்பட்டுள்ள வழக்கில், வருகிற 8ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தமிழக அரசு சார்பில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. நவீனவசதிகளுடன் கூடிய அரசு மருத்துவனையும் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது.இந்த மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்த இந்திய மருத்துவக் கவுன்சில் கல்லூரியில் சில குறைபாடுகள் இருப்பதாக கூறிஅங்கீகாரம் தர மறுத்து விட்டது. இந்தப் பிரச்சினையில் பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும், மத்திய சுகாதாரத் துறைஅமைச்சருமான அன்புமணி ராமதாஸ் அரசியல் செய்வதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.
இந் நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்க்க அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில்தமிழக அரசு சார்பில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவில், இந்திய மருத்துவக் கவுன்சில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் 19 குறைபாடுகள் இருப்பதாக கூறியிருந்தது.இவற்றில் 13 குறைபாடுகளை சரி செய்து விட்டோம். மீதமுள்ள குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய தீவிர நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்தவழக்கு நீதிபதி தினகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு விசாரணையை வருகிற 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications