கிருஷ்ணா நீர்: ஆந்திர முதல்வருக்கு ஜெ. கடிதம்
சென்னை:
சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக கிருஷ்ணா நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர்ரெட்டிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆந்திர மாநில முதல்வர்ராஜசேகர் ரெட்டியை நான் ஹைதராபாத் நகரில் சந்தித்து கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி சென்னை நகரின் குடிநீர்த்தேவைக்கு தண்ணீர் திறந்து விடக் கோரினேன்.அதன் பின்னர் எனது வேண்டுகோளை ஏற்று ஆந்திர அரசு ஓரளவு நீரைத் திறந்து விட்டது. இருப்பினும் உரிய நீர்கிடைக்கவில்லை. 1983ம் ஆண்டு போடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி சென்னை நகருக்கு ஆண்டுதோறும் ஆந்திரஅரசு 12 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும்.
தற்போது ஆந்திர மாநிலத்தில் பருவ மழை சிறப்பாக பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீசைலம் அணைக்கு பெருமளவு நீர் வந்துகொண்டுள்ளது. அணையில் 201.72 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
எனவே ஸ்ரீசைலம் அணையிலிருந்து போதுமான நீரை சோமசீலா அணைக்குத் திறந்து விடவும், அங்கிருந்து கண்டலேறுவழியாக பூண்டி நீர்த் தேக்கத்திற்கு தண்ணீர் விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 3 முக்கிய நீர்த் தேக்கங்களிலும் மிகவும் குறைந்த அளவிலான தண்ணீரே இருப்பு உள்ளது.இதை வைத்துக் கொண்டு 15 நாட்களுக்கு மேல் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இதைக் கருத்தில் கெண்டு சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக கிருஷ்ணா நீரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications