For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நகை கடைகளில் வருமான வரித்துறை அதிரடி ரெய்ட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை, திண்டுக்கல்லில் ஏராளமான அளவில் வரி ஏய்ப்பு செய்த நகைக் கடைகள், அடகு பிடிக்கும் கடைகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் காட்டப்படாத ரூ. 4 கோடியை கண்டுபிடித்தனர்.

நகைக் கடைகள் மட்டுமின்றி அடகுக் கடைகள் அதன் உரிமையாளர்கள் ஆகியோரது வீடுகளில் இந்த அதிரடி சோதனைகள்நடந்தன.

சென்னை கடைகளிலும் வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 3 கோடி கணக்கில் காட்டப்படாத பணம்கண்டறியப்பட்டது.

அதே போல திண்டுக்கல்லில் வாசவி ஜுவல்லரி மார்ட், வாசவி தங்க மாளிகை ஆகியவற்றிலும் அதன் உரிமையாளர்களானரவி, தினேஷ் ஆகியோரது வீடுகளிலும் ஒரே நேரத்தில் ரெய்ட் நடந்தது.

அப்போது கணக்கில் வராத ரூ. 1 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கடைகளின் உரிமையாளர்கள் மீது வருமான வரித்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, அபராதமும்விதித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X