For Daily Alerts
Just In
நகை கடைகளில் வருமான வரித்துறை அதிரடி ரெய்ட்
சென்னை:
சென்னை, திண்டுக்கல்லில் ஏராளமான அளவில் வரி ஏய்ப்பு செய்த நகைக் கடைகள், அடகு பிடிக்கும் கடைகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் காட்டப்படாத ரூ. 4 கோடியை கண்டுபிடித்தனர்.
நகைக் கடைகள் மட்டுமின்றி அடகுக் கடைகள் அதன் உரிமையாளர்கள் ஆகியோரது வீடுகளில் இந்த அதிரடி சோதனைகள்நடந்தன.சென்னை கடைகளிலும் வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 3 கோடி கணக்கில் காட்டப்படாத பணம்கண்டறியப்பட்டது.
அதே போல திண்டுக்கல்லில் வாசவி ஜுவல்லரி மார்ட், வாசவி தங்க மாளிகை ஆகியவற்றிலும் அதன் உரிமையாளர்களானரவி, தினேஷ் ஆகியோரது வீடுகளிலும் ஒரே நேரத்தில் ரெய்ட் நடந்தது.
அப்போது கணக்கில் வராத ரூ. 1 கோடி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கடைகளின் உரிமையாளர்கள் மீது வருமான வரித்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, அபராதமும்விதித்துள்ளனர்.
Comments
Story first published: Saturday, August 6, 2005, 5:30 [IST]