உலக தரத்தில் போர் விமானம் தயாரிக்க கலாம் கோரிக்கை
ஹைதராபாத்:
உலகின் மிகச் சிறந்த போர் விமானத்தை உருவாக்குமாறு இந்திய விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் கோரிக்கைவிடுத்துள்ளார். அதே நேரத்தில் நோய்களைத் தீர்க்கும் வகையில் மரபணு ஆராய்ச்சிகளில் தீவிரமாக இறங்குமாறும்கோரியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ஆர்சிஐ அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் இடையே கலாம் உரையாற்றினார். அவர்கூறுகையில்,அமெரிக்க, ரஷ்ய, ஐரோப்பிய நாடுகளின் போர் விமானங்களுக்கு இணையான வகையில் இலகு ரக போர் விமானங்களைநாம் தயாரிக்க வேண்டும். நமது விமானப் படைக்கு பெரும் பலம் சேர்க்கும் வகையில் அந்த விமானம் இருக்க வேண்டும்என்றார்.
முன்னதாக டி.என்.ஏ. பிங்கர் பிரிண்டிங் (மரபணுவியல் ஆய்வு மையம்) மையத்தில் புதிய ஆராய்ச்சிப் பிரிவைத் துவக்கிவைத்துப் பேசிய கலாம்,
இந்தியர்கள் இடையே அதிகளவில் இதய நோய்கள் பரவுவதற்கான காரணத்தை ஆராய வேண்டும். அதற்கான மரபணுஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். நோயைக் கட்டுப்படுத்தவும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும்கண்டறிய வேண்டும்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இரத்தம் தொடர்பான சிக்கிள் செல் அனீமியா நோய் மிக அதிகமாக உள்ளது. இதற்கான காரணத்தைஅறிய உரிய ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.
பின்னர் மெளலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் கலாம் பங்கேற்று மாணவ,மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.












Click it and Unblock the Notifications