For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தம் கோரும் சந்திரிகா

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே 2002ம் ஆண்டில் கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் திருத்தம்செய்யப்பட வேண்டும் என அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.

இலங்கையில் தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்க நார்வே தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

நேற்று அதிபர் சந்திரிகாவை நார்வே துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் சந்தித்துப் பேசினார்.முன்னதாக புலிகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசினார்.

இதற்கிடையே சந்திரிகாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்க, நார்வே மூலமாக ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும். இந்தத் திருத்தங்கள் மூலம் இரு தரப்பிலும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்றுகூறியுள்ளார்.

ஆனால், அவை என்ன மாதிரியான திருத்தங்களாக இருக்கும் என்பதைக் கூறவில்லை.

இதற்கிடையே யாழ்பாணத்தில் சவரத் தொழிலாளி ஒருவரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில்ஒரு போலீஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டார். அவரை பொது மக்களே அடித்துக் கொன்றனர்.

இது குறித்து புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் கூறுகையில்,

யாழ்பாணத்தில் நடந்த அந்த போலீஸ் அதிகாரியின் கொலைச் சம்பவம் துரதிஷ்டவசமானது. மக்கள் வசிக்கும் பகுதியில்ராணுவத்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களைஅவர்கள் மதித்து நடக்க வேண்டும்.

ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அமைதியை நிலை நாட்ட நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்பு அளிப்போம்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X