விழுப்புரம் அருகே பாமக, விஜயகாந்த் ரசிகர்கள் மோதல்
விழுப்புரம்:
சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக பாமகவினருக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர்படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள தெளி கிராமத்தில் விஜயகாந்த் ரசிகர் மன்ற செயலாளர் மணி மற்றும் மன்ற நிர்வாகிகள் மதுரையில்அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநாடு குறித்த விளம்பரம் எழுதுவதற்காக ஆதிகேசவன் என்பவர் வீட்டு சுவற்றில் வெள்ளைஅடித்தனர்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாம.கவைச் சேர்ந்த தாமோதரன், அருள், கலியமூர்த்தி, சக்கரபாணி கண்ணன் ஆகியோர்சுவரில் விளம்பரம் எழுதக் கூடாது என்று மணியிடம் தகராறு செய்தனர்.
அதற்கு மணி, வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெற்றே வெள்ளையடித்தோம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்தபாமகவினர் 5 பேரும் சேர்ந்து விஜயகாந்த் ரசிகர்கள் மணி, கிருஷ்ணமூர்த்தி, பஞ்சநாதன் ஆகியோரை ஆயுதங்களால்தாக்கியுள்ளனர்.
இதையறிந்த விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பஞ்சநாதன், வசந்தா, ரவி, சிவக்குமார், தேவகிருஷ்ணன்,பழனி, குமார் ஆகியோர் சேர்ந்து பாமகவினரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கண்ணன், தனலட்சுமி ஆகியோர்விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் கொடுத்த புகார்களின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் தனித்தனியே வழக்குபதிந்து பாமகவை சேர்ந்த சக்கரபாணி, தாமோதரன், அருள் ஆகியோரையும், விஜயகாந்த் மன்றத்தை சேர்ந்த சிவக்குமார்,பழனி, வசந்தா ஆகியோரையும் கைது செய்தனர்.