வைகோவின் பொடா சிறைவாச புத்தகம்: பிரதமர் வெளியிடுகிறார்
சென்னை:
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட வைகோ 577 நாட்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது தனது தொண்டர்களுக்கு மதிமுகவின் சங்கொலி இதழில் கண்ணின் மணிகளே என்ற பெயரில் கடிதங்கள் எழுதிவந்தார். 66 வாரங்கள் அவர் கடிதங்களை எழுதினார்.இந்தக் கடிதங்கள் இப்போது தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படுகிரது. தமிழ், ஆங்கிலத்தில் இப் புத்தகத் தொகுப்புஉருவாக்கப்பட்டுள்ளது.
தமிழில் 800 பக்கத்திலும் ஆங்கிலத்தில் 650 பக்கத்திலும் அச்சிடப்பட்டுள்ள இந்த கடிதத் தொகுப்பு வரும் செப்டம்பர் மாதம்3ம் தேதி வெளியிடப்படுகிறது.
சென்னை சாந்தோம் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டுஆங்கிலப் புத்தகத்தை வெளியிடுகிறார். அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித்பெற்றுக் கொள்கிறார்.
அதே நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி தமிழ் புத்தகத்தை வெளியிடுகிறார்.
முழுக்க முழுக்க அரசியல் நிகழ்ச்சியான இதில் பொடாவை தவறாகப் பயன்டுத்தியதாக நீதிமன்றங்களால் கண்டிக்கப்பட்டஅதிமுக அரசையும் முதல்வர் ஜெயலலிதாவையும் பிரதமர் விமர்சிப்பார் என்று கூறப்படுகிறது.
வைகோ ஏற்கனே 65 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அதில் ரத்தம் கசியும் இதயத்தின் குரல், போர்க் களத்தில் ஈழத்தமிழர்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.












Click it and Unblock the Notifications