For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சம்பா சாகுபடிக்கு கல்லணை இன்று திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சம்பா சாகுபடிக்காக கல்லணை இன்று திறந்து விடப்பட்டது. விநாடிக்கு 3,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அம்மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஹோரங்கி உட்படஅனைத்து அணைகளும் வேகமாக நிரம்பின. இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அபரிதமான நீர் வரத்தால் மேட்டூர் அணையில் ஒரே நாளில் 13அடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் பல வருடங்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டியது.

தற்போது அணையில் 113 அடி தண்ணீர் உள்ளது. இந் நிலையில் சம்பா சாகுபடிக்காக கடந்த 4ம் தேதி மேட்டூர்அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து விவசாயப்பணிகளை தொடங்கியுள்ளனர்.

இந் நிலையில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை கல்லணைக்கு வந்து சேர்ந்தது.இதையடுத்து இன்று கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமைச்சர் வைத்தியலிங்கம் அணையைத் திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம், திருச்சி மற்றும் தஞ்சை மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். விநாடிக்கு 3,500 கன அடிதண்ணீர் திறந்து விடப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X