கோவை குண்டு வெடிப்பு: நெல்லையில் முக்கிய குற்றவாளி கைது
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
கோவை தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான அப்துல் காதர் இன்று நெல்லையில் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் கோவையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல அல் உம்மா தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.மேலும் இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி கைது செய்யப்பபட்டார். இவர் கடந்த7 வருடங்களாக கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய அல் உம்மா தீவிரவாதியான மைதீன் என்ற அப்துல் காதரை போலீஸார் தேடிவந்தனர். இந் நிலையில் நெல்லையில் வைத்து அப்துல் காதரை சிறப்புப் படை போலீஸார் இன்று கைது செய்தனர்.
அவனிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications