For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்ய நீர் மூழ்கியை மீட்டது பிரிட்டன்: 7 வீரர்கள் உயிர் பிழைத்தனர்

By Staff
Google Oneindia Tamil News

மாஸ்கோ:

7 வீரர்களுடன் ஆழ் கடலில் இரும்பு வலையில் சிக்கிய ரஷ்யாவின் சிறிய நீர் மூழ்கியை பிரிட்டன் அனுப்பிய ஆளில்லாரோபோட் கருவி மீட்டது. இதையடுத்து 7 வீரர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கடந்த வாரம் பசிபிக் கடலில் பெட்ரோபாவ்லோவிஸ்க் என்ற இடத்துக்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஏ.எஸ். 29 ப்ரிஸ்என்ற சிறிய ரஷ்ய நீர் மூழ்கி நடுக் கடலில் 109 மீட்டர் ஆழத்தில் இரும்பு வலையில் சிக்கி தரை தட்டியது.

நீர்மூழ்கியின் பின் துடுப்பில் இரும்புக் கம்பி சுற்றிக் கொண்டதையடுத்து அது மேலே வர முடியாமல் சிக்கயது. இதையடுத்துஅதை மேலே கொண்டு வர ரஷ்ய கடற்படை எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியை ரஷ்யா கோரியது. அந் நாடுகள் கப்பல்களையும்,ஆழ்கடல் மீட்புக் கருவிகளை விமானங்களிலும் அனுப்பி வைத்தன.

இதில் முதலில் வந்து சேர்ந்த பிரிட்டனின் ஆளில்லாமல் இயங்கும் ஆழ்கடல் ரோபோட் கருவியான ஸ்கார்பியோ, நேற்று ரஷ்யநீர்மூழ்கியை சுற்றியிருந்த இரும்பு வலையை வெட்டி நீர் மூழ்கியை மீட்டது. இதையடுத்து அதிலிருந்த 7 வீரர்களும் உயிருடன்மீட்கப்பட்டனர்.

இன்று பிற்பகல் வரையே அந்த வீரர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் நீர்மூழ்தியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய நீர் மூழ்கிகள் விபத்தில் சிக்குவது புதிதல்ல. 2000ம் ஆண்டில் 118 வீரர்களுடன் அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிகடலில் மூழ்கியது. அதை வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்தது ரஷ்யா. ரஷ்யாவால் அதை மீட்க முடியாமல் போனதால் 118வீரர்கள் உயிரிழந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X