For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாமக்கல்: கார்-லாரி மோதலில் 5 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

நாமக்கல்:

ஈரோட்டைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரியின் குடும்பத்தினர் பயணம் செய்த கார், நாமக்கல் அருகே லாரியுடன் மோதியதில்,காரில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

ஈரோட்டைச் சேர்ந்தவர் தனக்கோடி. எண்ணெய் வியாபாரியான அவர், குடும்பத்துடன் வேதாரண்யம் சென்றிருந்தார். பின்னர்ஊர் திரும்பும்போது அவர்கள் பயணம் செய்த கார், நாமக்கல் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகியது.

எதிரே வந்த லாரியுடன் எதிர்பாராதவிதமாக கார் மோதியதில், கார் அப்பளமாக நொறுங்கியது. அதில் பயணம் செய்த 3பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தையடுத்து அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X