3 நாட்களில் அபராதத்தைக் கட்ட அப்பு மனைவிக்கு உத்தரவு
சென்னை:
நீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களைத் தந்ததாக அப்புவின் மனைவி நிர்மலா மீது அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ள புகார்உண்மையானது என்று தெரியவந்ததால், அவருக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட ரூ. 10,000 அபராதத்தை உறுதி செய்த சென்னைஉயர்நீதிமன்றம் 3 நாட்களுக்குள் அபராதத் தொகையைக் கட்டுமாறு நிர்மலாவுக்கு உத்தரவிட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் அப்புவைப் பார்க்க போலீஸாரும், சிறைநிர்வாகமும் அனுமதிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிர்மலா தெரிவித்திருந்தார்.ஆனால் அரசுத் தரப்பு இதை மறுத்தது. மேலும், அப்புவை நிர்மலா பலமுறை சிறைக்குச் சென்று பார்த்தது தொடர்பானஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தாக்கல் செய்தது. இந்த ஆவணங்களை சரி பார்த்த உயர்நீதிமன்றம், நிர்மலாபொய் சொன்னதை உறுதி செய்தது.
இதைத் தொடர்ந்து தவறான தகவல்களைத் தந்ததற்காக நிர்மலாவுக்கு தனி நீதிபதி பி.டி.தினகரன் ரூ.10,000 அபராதம் விதித்துஉத்தரவிட்டார். இதை எதிர்த்து நிர்மலா மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் என்.தினகர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர்அடங்கிய பெஞ்ச், உயர்நீதிமன்றத்திற்கு நிர்மலா பொய்யான தகவல்களைக் கூறியுள்ளது ஆவணங்கள் மூலம் உறுதியாகத்தெரிய வருகிறது.
எனவே இதற்காக விதிக்கப்பட்ட அபராதம் உறுதி செய்யப்படுகிறது. இந்தத் தொகையை இன்னும் 3 நாட்களுக்குள் நிர்மலாகட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications