நாறிக் கிடக்கும் சட்டம், ஒழுங்கு: கருணாநிதி தாக்கு
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை நாறிப் போய்க் கிடக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக கூறியுள்ளார்.
முரசொலி நிாளிதழில் அவர் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் அமைதி நிலவுவதாக சிலர் கூறித் திரிகிறார்கள். உண்மையில் சட்டம் ஒழுங்கு நாறிப் போய்க் கிடக்கிறது. இதற்குஉதாரணமாக, கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் 27ம் தேதி வரையில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள்,கற்பழிப்புச் சம்பவங்களை எடுத்துக் கூறலாம்.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் ஜெயலலிதாவுக்கு இது குறித்தெல்லாம கவலை இல்லை. தேர்தலை எப்படி சமாளிப்பதுஎன்பது பற்றி மட்டுமே அவர் கவலைப்படுகிறார்.
அதனால்தான், தேர்தல் காலத்தின்போது தனக்கு சாதகமாக யாரெல்லாம் இருப்பார்கள், ஆளுங்கட்சிக்கு அனுசரணையாக யார்இருப்பார்கள் என்று தேடித் தேடிப் பார்த்து, அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுத்து முக்கியமான காவல்துறைப் பதவிகளில்அவர்களை நியமித்து வருகிறார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.