லண்டன்: இந்தியர் மீது இனரீதியில் கடும் தாக்குதல்
லண்டன்:
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் அந் நாட்டு இளைஞர்களால் கல் வீசித் தாக்கப்பட்டார்.இனரீதியில் நடந்த அந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார்.
லண்டன் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து ஆசியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.
இந் நிலையில் தென் கிழக்கு இங்கிலாந்து நகரான சட்ஹாமில் இந்தியரான யாசேன் மகாராஜ் (28) என்பவரை அந் நாட்டுஇளைஞர்கள் கெட்ட வார்த்தைகளால் திட்டியவாறு சுற்றி வளைத்துத் தாக்கினர். பெரிய கற்களையும் அவர் மீது வீசித்தாக்கினர்.
இதில் பெரிய கல் ஒன்று அவரது முதுகுப் புறத்தைத் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
செளதியைத் தாக்க திட்டம்:செளதி அரேபியாவைத் தாக்க தீவிரவாதிகள் இறுதிக் கட்டத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இங்கிலாந்து உளவுப் பிரிவுஎச்சரித்துள்ளது.
இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை தனது இணையத் தளத்தில் இது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்,
செளதி அரேபியா மிக விரைவில் பயங்கர தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகலாம். அந் நாட்டைத் தாக்கும் திட்டத்தைதீவிரவாதிகள் இறுதி செய்து வருகின்றனர். மேலும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களையும், அவர்கள் கூடும், வசிக்கும்இடங்களையும் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் செளதிக்குச் செல்லும் ஐரோப்பிய, அமெரிக்க நாட்டவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications