மலேசியாவில் கொலை, போதை மருந்து கடத்தலில் இந்தியர்கள்
கோலாலம்பூர்:
தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட மும்பை தாதா கும்பல்களும் தமிழகம் உள்ளிட்ட தென் இந்தியாவைச் சேர்ந்த கும்பல்களும்இணைந்து மலேசியாவில் போதை மருந்து கடத்தல், ஆள் கடத்தல், கொலைகளில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்துக்குவந்துள்ளது.
சமீபத்தில் மலேசியாவில் 156 கிலோ கேடமைன் என்ற போதைப் பொருள் பிடிபட்டது. இந்த ஆண்டில் மலேசியாவில்பிடிபட்ட பெரிய போதைப் பொருள் இது தான். ரூ. 10 கோடி மதிப்புள்ள இந்த போதைப் பொருள் சீனாவுக்குக் கடத்தப்படஇருந்தது.இந்தியா வழியாகக் கொண்டு வரப்பட்ட இந்தப் போதைப் பொருள் கடத்தலில் மும்பையைச் சேர்ந்த தாதா கும்பல்களுக்குத்தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவரை இந்தக் கடத்தல் தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இருவர் தென் இந்தியர்கள், 12 பேர்மலேசியர்கள். கைதான மலேசியர்களில் ஒருவர் டாக்டர், இன்னொருவர் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் பொதுமேலாளர் ஆவார்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதை மருந்து கடத்தல் தவிர ஆள் கடத்தல் மற்றும் மலேசியாவில் பல்வேறுகொலைகளிலும் இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜன் ஆகியோரின் கூலிப் படையினரும் தென் இந்தியாவைச் சேர்ந்த கடத்தல் கும்பல்களும்மலேசியாவில் கைகோர்த்துக் கொண்டு செயல்பட்டு வருவதும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது என அந் நாட்டு போதைத்தடுப்புப் பிரிவின் இயக்குனர் முகம்மத் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.