For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்கவுண்டரில் ரவுடி கொலை: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சேலத்தில் ரவுடியை போலீஸார் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொன்றது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் அருகே உள்ள நயினார்கவுண்டன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த பிரபல ரவுடி கர்ணன் என்பவர் கடந்த ஆண்டு சேலம்மாவட்ட போலீஸாரால் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது போலீஸாரை தாக்கி விட்டுத் தப்பிச் செல்லும்போது நடந்த மோதலில் கர்ணன் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந் நிலையில் தனது கணவர் அப்போதைய மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பொன்மாணிக்கவேலுவின் தூண்டுதலின்பேரில் வேண்டும் என்றே சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறி கர்ணனின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.தினகரன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸார் இந்த சம்பவம்தொடர்பாக உரிய விசாரணை நடத்தவில்லை. அவர்களது நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. கூறும் காரணங்களும்பொருத்தமாக இல்லை.

எனவே இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறேன். இதுகுறித்து 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்திநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தனது கணவர் இறப்புக்கு இழப்பீடு தர வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை உரியமுறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X