ரகு சென்னையில் தங்க உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீன்படி கோவையில் தங்கியுள்ள ரகு இனிமேல் சென்னையில் தங்கலாம் என்றுசென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துதள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைதான சங்கர மட மேலாளர் சுந்தரசே அய்யரையும், ரகுவையும் ஜாமீனில் விடுவித்த சென்னைஉயர்நீதிமன்றம், அய்யரை விழுப்புரத்திலும், ரகுவை கோவையிலும் தங்கியிருக்க நிபந்தனை விதித்தது.அதன்படி இருவரும் அந்தந்த ஊர்களில் தங்கியுள்ளனர். இந் நிலையில் தங்களது நிபந்தனையை தளர்த்தக் கோரி இருவரும்உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தனர். இதை நீதிபதி சர்தார் சக்காரியா உசேன் விசாரித்தார். ஜாமீன் நிபந்தனையைமுழுவதுமாக ரத்து செய்ய மறுத்த நீதிபதி, அதை தளர்த்தி உத்தரவிட்டார்.
அதன்படி, அக்டோபர் 1ம் தேதி முதல் இருவரும் சென்னையில் தங்கியிருக்கலாம் என்றும், திங்கள்கிழமை மற்றும்வியாழக்கிழமைகளில் ஆயிரம் விளக்குக் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதிஉத்தரவிட்டார்.
செப்டம்பர் மாதக் கடைசி வரை தற்போதுள்ள ஊர்களிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில்தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications