ஜோசியத்தை நம்பி அரசியலுக்கு வரும் விஜயகாந்த்: ஸ்டாலின் நக்கல்
சிவகாசி:
அரசியலில் புகுந்தால் முதல்வராகி விடுவீர்கள் என்று ஜோசியக்காரர்கள் கூறியதை நம்பி நடிகர் விஜயகாந்த் அரசியலில்குதிக்கிறார் என்று திமுக துணை பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் நக்கல் அடித்துள்ளார்.
சிவகாசி வந்த ஸ்டாலின் அங்கு திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பசுகையில், விஜயகாந்த்தை ஒரு பிடி பிடித்தார். அவர்கூறியதாவது:விஜயகாந்த் மக்கள் நாடியைப் பிடித்துப் பார்த்து அரசியலுக்கு வரவில்லை. சில ஜோசியக்காரர்கள் அவரது ஜாகத்தைப் பார்த்துநீங்கள் முதல்வராவீர்கள் என்று கூறியதால், அதை நம்பி அரசியலுக்கு வருகிறார்.
மக்கள் ஆதரவுடன், அவர்களது அன்புடன் அரசியலில் ஈடுபடுவோர் மட்டுமே வெற்றி பெற முடியும். ஜோசியத்தை நம்பிஅரசியலில் நிலைக்க முடியாது.
திமுக தலைவர் கருணாநிதியின் வழிகாட்டுதல் மற்றும் மத்திய அரசின் உதவியுடன்தான் சேது சமுத்திரத் திட்டம்நினவாகியுள்ளது. தமிழும் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொடா சட்டம் ரத்தாகியுள்ளது. இந்த சாதனைகள் எல்லாம்திமுகவின் முன் முயற்சிகளால்தான் சாத்தியமாகியுள்ளது.
இந்தக் காரணத்தால்தான் நாம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட ஆட்சிப் பொறுப்பில் இருப்பது போன்ற தோற்றம் மக்கள்மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட மிகச் சிறப்பாக தனது கடமையை செய்து வருகிறார் கருணாநிதிஎன்றார் ஸ்டாலின்.