அயோத்தி: தீவிரவாதிகளின் சமாதியை தோண்டிய சாதுக்கள்
பைசாபாத்:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி- ராமர்கோவில் வளாகத்தைத் தாக்க முயன்று சுட்டுக் கொல்லப்பட்ட 5தீவிரவாதிகளின் புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுக்க இந்து அமைப்பைச் சேர்ந்த சாதுக்கள் முயன்றனர். அவர்களைஅதிகாரிகள் தடுத்துவிட்டனர்.
சமீபத்தில் நடந்த அயோத்தி தாக்குதலை பாதுகாப்புப் படையினர் முறியடித்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இவர்களதுஉடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பின் அயோத்தியில் உள்ள தர்கி தாகியா என்ற இடத்தில் புதைக்கப்பட்டுள்ளன.இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து பிரித்து தனியாக பூர்வாஞ்சல் மாநிலம் கோரி வரும் பூர்வாஞ்சல் ராஜ்ய சங்கர்ஷசமிதி அமைப்பைச் சேர்ந்த சாதுக்கள் திடீரென இந்த சமாதிகளை தோண்டத் தொடங்கினர்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், ஜின்னாவை வாழ்த்திப் பேசிய அத்வானி ஆகியோருக்கு எதிராக கோஷம்எழுப்பியபடியே சமாதிகளை தோண்டினர்.
இதையடுத்து அதிகாரிகளும், பாதுகாப்புப் படையினரும், காவல் துறையினரும் அங்கு குவிக்கப்பட்டனர்.
சமாதிகளைத் தோண்டிய சாதுக்களை தடுத்து நிறுத்தினர். ஆனால், உடல்களை தோண்டியெடுத்து கோவில் நகரான அயோத்திக்குவெளியே புதைக்க வேண்டும் என சாதுக்கள் கூறினர்.
இந்தக் கோரிக்கைகுறித்துப் பரிசீலிப்பதாகவும், கோரிக்கையை மனுவாக எழுதித் தருமாறும் கூறியதையடுத்து தோண்டும்வேலையை விட்டுவிட்டு சாதுக்கள் கலைந்து சென்றனர்.
சமாதிகளை உடனே அயோத்திக்கு வெளியே கொண்டு செல்லாவிட்டால் பெரும போராட்டத்தில் ஈடுபட்டு, உடல்களைநாங்களே தோண்டியே வெளியே எடுப்போம் என சாதுக்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications