சிபிஐ விசாரணை: சதுர்வேதியின் மனு தள்ளுபடி
சென்னை:
தன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிய சதுர்வேதி சாமியாரின் மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை தொழிலதிபர் சுரேஷின் மனைவி மற்றும் மகளைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்தது, பண மோசடி செய்ததுஉள்ளிட்ட பல்வேறு புகார்களின் பேரில் சதுர்வேதி கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தின் கீழும் அவர் கைதுசெய்யப்பட்டார்.இந் நிலையில் தன் மீதான வழக்குகளை தமிழக போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது, பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே தன் மீது பொய்யான வழக்குகள் போடப்பட்டுள்ளது.
எனவே என் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சதுர்வேதி சார்பில் சமீபத்தில்உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.தினகரன் இன்று சதுர்வேதியின்மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மனுதாரர் மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற முடியாது. குற்றம் சாட்டப்பட்டவரே, தனது வழக்குகளை யார் விசாரிக்கவேண்டும் என்று உரிமை கோர முடியாது என ஒரு வழக்கில் முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்அடிப்படையில் மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications