திமுக-விஜயகாந்த் ரசிகர்கள் இடையே பெரும் மோதல்

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திமுக தொண்டர்களுக்கும், விஜயகாந்த் ரசிகர்களுக்கும் இடையே பெரும் மோதல்ஏற்பட்டது. இதனால் காரைக்குடியில் பதட்டம் நிலவுகிறது.

விஜயகாந்த் தனது புதிய அரசியல் கட்சி அறிவிப்பை மதுரையில் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறவுள்ள ரசிகர் மன்றமாநாட்டில் வெளியிடுகிறார். மாநாடு தொடர்பான வேலைகளில் ரசிகர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதேபோன்ற சுவர் விளம்பரங்கள் காரைக்குடியிலும்வரையப்பட்டுள்ளன. செக்காலை, ஐந்து விளக்கு, கருவூலம் ஆகிய பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டிருந்தன.

இந் நிலையில் திமுகவைச் சேர்ந்தவர்கள், வருகிற 27ம் தேதி வேலூரில் நடைபெறவுள்ள மண்டல மாநாடு தொடர்பானவிளம்பரத்தை, விஜயகாந்த் ரசிகர்கள் வரைந்து வைத்திருந்த விளம்பரத்தை அழித்து விட்டு வரைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அறிய வந்ததும் விஜயகாந்த் ரசிகர்கள் அங்கு திரண்டு வந்தனர். திமுகவினருக்கும், ரசிகர்களுக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டது. இதுமுற்றி இரு தரப்பினரும் கைகலப்பில் இறங்கினர். அவர்களுக்கிடையே பெரும் மோதல் மூளும்சூழ்நிலை உருவானது.

அதற்குள் தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து போகச்செய்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுவதால் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+