இளைஞர் காங். தலைவர் மீது பரபரப்பு புகார்
சென்னை:
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகனுமான டாக்டர் விஷ்ணு பிரசாத் மீதுகொலை மிரட்டல் புகார் எழுந்துள்ளது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் விஷ்ணு பிரசாத். ராமதாஸின் மருமகனான இவர் மீது இளைஞர் காங்கிரஸ்துணைத் தலைவர் காண்டீபன் பரபரப்பு புகாரை சுமத்தியுள்ளார். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை சந்தித்துகாண்டீபன் கொடுத்த புகார் காங்கிரஸ் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.தனது புகாரில் காண்டீபன் கூறியுள்ளதாவது: எனக்கும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுபிரசாத்துக்கும் அரசியல் ரீதியாகஒத்துவரவில்லை. இதனால் கோபமடைந்த அவர், தனக்கு உடன்பாடாக செயல்படவில்லை என்றால் கடுமையானவிளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். குண்டர்களை வைத்துத் தீர்த்துக் கட்டி விடுவேன் என்று மிரட்டினார்.
இந் நிலையில் கடந்த மாதம் பெங்களூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினருக்கான பயிற்சி முகாம் நடந்தது. அப்போதுவிஷ்ணுபிரசாத் தூண்டுதலின் பேரில் சில குண்டர்கள் என்னை அணுகி, விஷ்ணுபிரசாத்துடன் சமாதானமாகப் போகும்படியும்,இல்லாவிட்டால் உயிர் தப்பாது என்றும் மிரட்டினர். இவற்றையெல்லாம் விஷ்ணுபிரசாத் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
சென்னைக்குத் திரும்பிய பிறகும் தொலைபேசி மூலம் விஷ்ணுபிரசாத்துடன் அமைதியாகப் போகும்படி எனக்கு மிரட்டல்கள்வந்து கொண்டுள்ளன. ராஜு என்பவரும், சில அடியாட்களும் என்னைத் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள்.
எனது உயிருக்கு விஷ்ணுபிரசாத் மற்றும் அவரது அடியாட்களால் மிரட்டல் ஏற்பட்டுள்ளது. எனவே விஷ்ணுபிரசாத் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தப் புகாரை வடபழனி காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ள நடராஜ்உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் தான் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் மூத்த காங்கிரஸ் தலைவர் விநாயகமூர்த்தியை, சத்தியமூர்த்தி பவனில் வைத்துசரமாரியாக அடித்தனர், வீடு புகுந்தும் தாக்கினர்.
அந்த அமளி முடிவதற்குள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணுபிரசாத் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது காங்கிரஸ்கட்சிக்குள் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications