சென்னையில் கம்பன் விழா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கம்பன் கழகம் சார்பில் வருகிற 12ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கம்பன் விழா நடத்தப்படும் என கம்பன் கழகதலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சென்னை கம்பன் கழகம் சார்பில் ஆண்டுதோறும் கம்பன் விழா நடத்தப்படுகிறது. 31வதுஆண்டாக, இந்த ஆண்டு வருகிற 12ம் தேதி முதல் 3 நாட்களுக்கு, கம்பன் விழா நடைபெறுகிறது.

ஏவி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் விழா நடைபெறும். 12ம் தேதி மாலை 5.30 மணிக்கு விழா தொடங்கும். கம்பன்கழகத்தை நிறுவிய முன்னாள் நீதிபதி மு.மு.இஸ்மாயில் உருவப் படத்தை, முன்னாள் குஜராத் மாநில உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி கோகுலகிருஷ்ணன் திறந்து வைப்பார்.

அதன் பின்னர் கம்பராமாயணத்தில் சகோதரத்துவம் என்ற நூலை ஆர். வீரமணி வெளியிடுகிறார். பா.நமச்சிவாயம்,எஸ்.என்.குப்புசாமி, தமிழண்ணல், சிவ. திருச்சிற்றம்பலம், வடிவேல், மாசிலாமணி, திருப்பூர் கிருஷ்ணன், எஸ்.எம்.கமால்ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 75,000 விருதுப் பணமாக வழங்கப்படும். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 48 மாணவ,மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்சிறப்புரையாற்றுகிறார்.

13ம் தேதி நடைபெறும் விழாவில் கரு.பழனியப்பன் தலைமையில் இளைஞர் பட்டிமன்றம் நடக்கிறது. மாலை 5 மணிக்குகருத்தரங்கம் நடைபெறுகிறது. 14ம் தேதி காலை கவிஞர் மு.மேத்தா தலைமையில் கவிதை அரங்கம் நடைபெறுகிறது. மாலை5 மணிக்கு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது என்றார் ஆர்.எம்.வீரப்பன்.

இந்த ஆண்டுக்கான விழாவுக்கு கம்பன் காட்டும் விழுமங்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் வீரப்பன் தெரிவித்தார்.பேட்டியின் போது துணைத் தலைவர் க.ராசாராம், ஏவி.எம்.சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+