கோவில் திருவிழாவில் 3 பேர் வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே கிராமக் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டனர்.

குரும்பூர் அருகே உள்ளது அம்மன்புரம். இதன் அருகே உள்ளது கந்தன்குடியிருப்பு. இங்குள்ள சுடலைமாடசாமி கோவிலில்கொடை விழா நடத்தப்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இந் நிலையில் செவ்வாய்க்கிழமை கோவிலில் 8வது நாள் பூஜை நடந்தது. அப்போது இரு தரப்பினரும் மீண்டும் மோதலில்இறங்கினர். இதில் 6 பேர் அரிவாள்களால் சரமாரியாக வெட்டப்பட்டனர். இவர்களில் நயினார், சுவாமிநாதன், பெரியசாமிஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

மற்ற 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலைசெய்யப்பட்ட3 பேரும் கந்தன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள்.

கோவில் திருவிழாவில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோதிக்கொண்டவர்களும், கொலை செய்யப்பட்டவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வகுப்புக் கலவரம் ஏற்படவாய்ப்பில்லை என்று போலீஸார் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+