30 கோவில்களுக்கு ஜெ. ரூ. 3 லட்சம் நன்கொடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசின் திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்காக தனது சம்பளத் தொகையான 3 லட்சத்து 7,620 ரூபாயை, 30கோவில்களின் செயல் அலுவலர்களிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தனது மாத ஊதியத்தை, திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்கு வழங்கிவருகிறார் ஜெயலலிதா. இந் நிலையில் தனது 4 மாத சம்பள நிலுவைத் தொகையான ரூ. 2,54,741 மற்றும் மார்ச், ஏப்ரல், மே மாதஊதியம் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தம் ரூ. 3,07,620 தொகையை 30 கோவில்களுக்கு ஜெயலலிதா நன்கொடையாகவழங்கியுள்ளார்.சென்னை வடபழனி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமிகோவில் உள்ளிட்ட 29 கோவில்களுக்கு தலா ரூ. 10,000ம், சூரியனார் கோவிலுக்கு ரூ. 17,601 நிதியையும் ஜெயலலிதாவழங்கியுள்ளார்.
இதற்கான காசோலைகளை 30 கோவில்களின் செயல் அலுவலர்களும் இன்று தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவிடமிருந்துபெற்றுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications