ஆகஸ்ட் 15 கூட்ட நெரிசல்: பெங்களூர், ஹைதராபாத்-சென்னை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:
பெங்களூர், ஹைதராபாத் இடையே அதிகளவில் பயணிகள் கூட்ட நெரிசல் நிலவுதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 15 விடுமுறை தினம் திங்கள்கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய தினங்களில் டிக்கெட் முன் பதிவு செய்யரயில் நிலையங்களில் ஏகப்பட்ட கூட்டம் காணப்படுகிறது. இதையடுத்து இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.பெங்களூர்-நாகர்கோவில் (திருவனந்தபுரம் வரை) இடையே ஆகஸ்ட் 12ம் தேதி சிறப்பு ரயில் (எண்: 0647) விடப்படுகிறது.இந்த ரயில் மாலை 5.45 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி மறுநாள் காலை 10 மணிக்கு நாகர்கோவிலைஅடையும்.
அதே போல பெங்களூர்-சென்னை இடையே ஆகஸ்ட் 12ம் தேதி சிறப்பு ரயில் (எண்: 0684) இயக்கப்படுகிறது. இந்த ரயில்பெங்களூரில் இருந்து இரவு 9.30க்குக் கிளம்பி மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு சென்னை சென்றடையும்.
ஆகஸ்ட் 15ம் தேதி காலை சென்னையில் சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு ஒரு சிறப்பு ரயில் (எண்: 0683) இரவு 9.30க்குப்புறப்பட்டு 16ம் தேதி காலை 5.15க்கு பெங்களூர் வந்தடையும்.
இதைத் தவி பெங்களூர்-திருச்சி (எண்: 0632), திருச்சி- பெங்களூர் (எண்: 0632) இடையிலும், பெங்களூர் எர்ணாகுளம்இடையிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதே போல ஹைதராபாத்தில் இருந்தும் சென்னை, பெங்களூர், திருப்பதிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 12ம் தேதி செகந்திராபாத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் (எண்: 702) இரவு 7.45 மணிக்குப் புறப்படுகிறது. இதுமறுநாள் காலை 9.15 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த ரயில் (எண்: 701) ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் இருந்து இரவு 5.15க்குப் புறப்பட்டு மறு நாள் காலை 7.45க்குசெகந்திராபாத் சென்றடையும். அதே போல திருப்பதிக்கும் சிறப்பு ரயில் (எண்: 764) இயக்கப்படுகிறது.