ராஜகோபாலுக்கு எதிராக ஜீவஜோதி ஆக்ரோஷ சாட்சியம்
திருத்துறைப்பூண்டி:
சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு எதிராக திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஜீவஜோதி இன்று ஆக்ரோஷமாகசாட்சியம் அளித்தார்.
கடந்த 2003ம் ஆண்டு வேதாரண்யம் அருகே உள்ள தேத்தாக்குடியில் உள்ள ஜீவஜோதியின் வீட்டிலிருந்து அவரைராஜகோபால், அவரது வழக்கறிஞர் உள்ளிட்ட 6 பேர் காரில் கடத்த முயன்றதாக திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ராஜகோபால்உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.கடந்த மாதம் 21ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜீவஜோதி ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராகநீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து ஜீவஜோதி இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி ராஜகோபாலுக்கு எதிராகசாட்சியம் அளித்தார்.
மிகவும் ஆவேசமாக பேசிய ஜீவஜோதி, எனது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொடைக்கானலுக்குக் கடத்திக் கொண்டு போய்கொலை செய்தது ராஜகோபால் தான்.
இதுதொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் நான் அவருக்கு எதிராக சாட்சியம் சொல்லி விடக் கூடாதுஎன்பதற்காகத் தான் தனது வழக்கறிஞர் மற்றும் அடியாட்களுடன் சேர்ந்து அவர் காரில் என்னைக் கடத்திச் சென்றார் என்றுகூறினார் ஜீவஜோதி.
விசாரணையின் போது சரவண பவன் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.