மனைவியை சாமியாருக்கு விருந்தாக்கியவருக்கு 10 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சாமியாருக்கு தனது மனைவியை விருந்தாக்கிய கணவருக்கும், அந்த சாமியாருக்கும் சென்னை மகளிர் நீதிமன்றம் தலா 10ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

சென்னை சின்மயா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது நண்பர் சுரேஷ்குமார் என்ற பகவான் ஸ்ரீசுரேஷ்வர். இவர் ஒருசாமியார். இவரைக் கேட்டுத் தான் சிவக்குமார் எதையும் செய்வார். அவர் என்ன சொன்னாலும் சிவக்குமார் தட்ட மாட்டாராம்.

இந் நிலையில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிவக்குமாருக்கு தனது பக்தர் ஒருவரின் மகளை திருமணம் செய்துவைத்தார் சுரேஷ்குமார். அதற்கு முன்பாக நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று கூறி அந்தப் பெண்ணை தனியாகஅழைத்து பூஜை நடத்தியுள்ளார்.

பின்னர் கட்டாயமாக அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தனது தந்தையிடம்இதுகுறித்துக் கூறியுள்ளார். அவரும் இதுகுறித்து சுரேஷ்குமாரிடம் கேட்டபோது, சுரேஷ்குமாரும், சிவக்குமாரும் சேர்ந்துகத்தியைக் காட்டி பெண்ணின் தந்தையை மிரட்டி, இதுகுறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று கூறியுள்ளனர்.

பின்னர் 68 பவுன் நகைகள் மற்றும் சொத்துப் பத்திரங்களையும் மிரட்டி வாங்கிக் கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும்சுரேஷ்குமார், சிவக்குமாரின் மனைவியை பலமுறை மிரட்டி உறவு கொண்டுள்ளார். சிவக்குமாரே, இதற்கான ஏற்பாடுகளைசெய்து கொடுப்பாராம்.

இந்தக் கொடுமையைப் பொறுக்க முடியாத சிவக்குமாரின் மனைவி தனது தாயாரிடம் கூற, அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிவக்குமாரும், சுரேஷ்குமாரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன், இருவருக்கும்தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 53,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அபராதப் பணத்தைபாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+